இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது – எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்!

பிரபல காமெடி நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.

பாலியல் தொல்லை சம்பவங்களை பிரபல குணசித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை. என்ன நடக்கிறது பள்ளிகளில்? குழந்தைகள் படிப்பதா இல்லையா?

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம். தற்போது கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக்கூடாது. அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும். அதுவும் விரைவாக. இதுவே என் வேண்டுகோள்” என்று கூறி உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!