ஜெய்பீம் படமல்ல பாடம், விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை – நடிகர் சூரி டுவீட்

ஜெய்பீம் படமல்ல, பாடம்; விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை என நடிகர் சூரி கூறியுள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில், ஜெய்பீம் படமல்ல, பாடம்; விருது கிடைத்தால் அது விருதுக்கே பெருமை என நடிகர் சூரி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில்,

இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருது க்கு பெருமை என பதிவிட்டுள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!