வீட்டின் சுவர் இடிந்து 3-ம் வகுப்பு மாணவிக்கு நடந்த பரிதாபம்!

படப்பை அருகே அரசு தொகுப்பு வீட்டின் சுவர் இடிந்து 3-ம் வகுப்பு மாணவி நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அடுத்த ஒரத்தூர் ஊராட்சியை சேர்ந்தவர் மாரி (வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (26). இவர்களுடைய மகள் லதா (8). இவர் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

அந்த பகுதியில் 18 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. நேற்று லதா, அரசு தொகுப்பு வீட்டில் வசித்து வந்த உறவினரின் மகளான சரண்யா (4) என்பவருடன் விளையாடி கொண்டிருந்தார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில் வீட்டின் உள்ளே இருந்த குறுக்குச்சுவர் திடீரென இடிந்து லதா மீது விழுந்தது.

சாவு

இதில் மாணவி லதா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!