மருமகனை கழுத்தை நெரித்து கொன்றேன்- கைதான மாமியார் பகீர் வாக்குமூலம்!

கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கழுதூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் வேல்முருகனுக்கும் வேப்பூர் பகுதியை சேர்ந்த அவரது அக்கா மகள் பவித்ரா (20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு பின்னர் வேல்முருகன் அவரது மனைவியுடன் கழுதூர் பகுதியில் வசித்து வந்தார். பவித்ரா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து பவித்ரா பிரசவத்துக்கு வேப்பூர் பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.

சம்பவத்தன்று வேல்முருகன் தனது மனைவியை பார்ப்பதற்காக வேப்பூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை பார்த்துவிட்டு இரவு அங்கேயே தங்கினார்.

இந்த நிலையில் வேல்முருகன் திடீரென இறந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் தாய் மலர்கொடி தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேப்பூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வேல்முருகன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வேல்முருகனின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் குமுதாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேல்முருகனை கழுத்தை நெரித்து குமுதா கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாரிடம் குமுதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

எனது தந்தைக்கு 2 மனைவிகள் அதில் முதல் மனைவிக்கு பிறந்தவள் நான். 2-வது மனைவிக்கு பிறந்தவர் தான் வேல்முருகன். எனக்கு திருமணமாகி நான் வேப்பூரில் வசித்துவந்தேன். எனது கணவர் ரவிச்சந்திரன் லாரி டிரைவர் என்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்றுவிடுவார்.

எனது வீட்டுக்கு வேல்முருகன் அடிக்கடி வந்து செல்வார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். அக்காள், தம்பி உறவு என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சிங்கபூரில் வேலை கிடைத்து வேல்முருகன் அங்கு சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து வேல்முருகனுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்டால் எங்களது தொடர்பு பாதிக்கப்படும் என்பதால் எனது மகள் பவித்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் கூறினார்.

இதையடுத்து வேல்முருகனுக்கு எனது மகளை திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்பும் நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்தோம்.

எனது மகள் பவித்ரா பிரசவத்துக்காக எனது வீட்டுக்கு வந்திருந்தாள். சம்பவத்தன்று அவளை பார்ப்பதற்காக வேல்முருகன் மதுபோதையில் எனது வீட்டிற்கு வந்தார்.

இரவு உணவு சாப்பிட்டு விட்டு எனது மகளும் வேல்முருகனும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். நான் மற்றொரு அறையில் படுத்திருந்தேன்.

நள்ளிரவில் எனது அறைக்கு வந்த வேல்முருகன் என்னை உல்லாசத்துக்கு அழைத்தார். மகள் பக்கத்து அறையில் தூங்குவதால் அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என கூறினேன். ஆனால் வேல்முருகன் என்னை வற்புறுத்தி உல்லாசத்தில் ஈடுபட முயன்றார். இதில் ஆத்திரமடைந்த நான் வேல்முருகனின் கழுத்தை நெரித்தேன் அதில் அவர் இறந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டார் என்று மற்றவர்களை நம்பவைப்பதற்காக அவரது உடலை தூக்கில் தொங்க விட்டேன். பின்னர் எனது மகளிடம் சென்று உனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறினேன். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த எனது மகள் வேல்முருகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் நான் கூறியதை அவர்கள் நம்பவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் நான் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து குமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் மருமகனை, மாமியார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!