3 மாதங்களுக்கு பிறகு படுக்கையில் இருந்து எழுந்து நடந்த யாஷிகா!

3 மாதங்களுக்கு பிறகு தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவர்கள் உதவியுடன் படுக்கையில் இருந்த எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமாகி துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஸாம்பி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பலியானார். யாஷிகாவின் இரண்டு கால்களிலும் இடுப்பிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. யாஷிகாவுக்கு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

3 மாதங்களுக்கு பிறகு தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவர்கள் உதவியுடன் படுக்கையில் இருந்த எழுந்து நடக்கும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘குழந்தை நடை. 95 நாட்கள் நம்பிக்கை, பிரார்த்தனை மற்றும் உறுதி. விரைவில் எந்த உதவியும் இல்லாமல் வலுவாக நடப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை நன்றாக கவனித்துக்கொண்ட டாக்டர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டு உள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!