இன்று தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக “ரெட் அலார்ட்” விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது.

இந்தநிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட இதர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, சிவகங்கை, திருவாரூர்,புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழையும் 5 நாட்களுக்கு கனமழையும் தொடரும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.

லட்சத்தீவு. மாலத்தீவு, அரபிக்கடல், கேரள கடல் பகுதிக்கு நவம்பர் 3-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். குமரிக்கடல், மன்னார் வளைகுடா கடல்பகுதிக்கு நவம்பர் 1-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!