நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சீல் வைப்பு!

சினிமாவில் வில்லன் மற்றும் காமெடி நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். வில்லன், காமெடியனாக நடித்து வரும் மன்சூர் அலிகான், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுரடியை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதால் அவரது வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!