நயன்தாரா எதற்காக அங்கு போனார்? ரசிகர்கள் சந்தேகம்…!


பொற்கோவிலில் நடிகை நயன்தாரா கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவிலில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா,நயன்தாரா, 30 வயதை தாண்டிய பிறகும் படவாய்ப்புகள் குவிகின்றன. இளம் கதாநாயகிகள் போட்டிக்கு மத்தியில் 10 வருடங்களுக்கு பிறகும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

நயன்தாராவுக்கு 32 வயது ஆகிறது. 2005-ல் ‘ஐயா’ படத்தில் அறிமுகமான அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார்.

நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாகவும் தெலுங்கில் வந்த ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாகவும் வந்து நடிப்பு திறமையை வெளிப்படுத்திய பிறகு கதாநாயகர்களுக்கு இணையாக உயர்ந்தார்.

பெரிய நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நயன்தாரா நடிக்க தொடங்கி உள்ளார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக அவரது படங்கள் வசூல் குவிக்கின்றன.

சினிமாவில் பிசியாக இருக்கும் அவர், இந்த ஆண்டு தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்றுள்ளார்.

கருப்பு நிற உடையில் தலையில் முக்காடு போட்டு அவர் பொற்கோவிலில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. நயன்தாராவின் புகைப்படங்களைப் பார்த்த அவரின் ரசிகர்கள், ‘ப்ப்பா எவ்வளவு அழகு?’ என்று பரவசமாகியுள்ளனர்.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நயன்தாரா எதற்காக பொற்கோவிலுக்கு போனார்? என்பது தெரியவில்லை! ஒரு வேலை, திருமணத்திற்கு ஆசி வாங்க போயிருப்பாரோ? என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. – Source: dailythanthi.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!