ஒரு பெண்ணால் ஆண் வளர கூடாதா? நிரூப்பின் முன்னாள் காதலி இவரா..?

பிக் பாஸ் 5 போட்டியாளர் நிரூப் தான் இந்த இடத்திற்கு வர முன்னாள் காதலி யாஷிகா தான் காரணம் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் ஒவ்வொருவராக அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் கதையை சொல்லி வருகின்றனர். நேற்று தாமரைச்செல்வி, அபிஷேக் உள்ளிட்டோர் கதை கூறினார். இந்நிலையில் இன்று நிரூப் நந்தகுமார் தனது கதையை சொல்லி சொல்லி இருக்கிறார். அதில் அவர் யாஷிகா ஆனந்த் பற்றியும் மிகவும் உருக்கமாக பேசியிருக்கிறார்.

பலருக்கும் தெரியும் நான் பிக்பாஸ் வருகிறேன் என தகவல் வெளியான போது பலரும் யாஷிகாவின் முன்னாள் காதலர் உள்ளே வருகிறார் என பேசினார்கள். நான் பெருமையாக சொல்கிறேன் இங்கே அவள் மூலமாக வந்திருப்பது எனக்கு பெருமையான விஷயம். இதை சொல்வதில் எனக்கு எந்த அசிங்கமும் இல்லை, நிறைய பேர் கேட்பார்கள், எனக்கு வாழ்க்கை காட்டியது அவர்தான்.”

“இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு எந்த contactம் கிடையாது. அவள் தான் எனக்கு காட்டினாள். ஏன் எல்லோரும் தப்பாக நினைக்கிறீர்கள். ஒரு பெண்ணால் ஆண் வளர கூடாதா? பசங்க மூலமாக பல பெண்கள் வளரலாம் ஆனால் பெண்கள் மூலமாக ஆண் வரக் கூடாதா” என அழுத்தமாக கேட்டிருக்கிறார் நிரூப் நந்தகுமார்.

யாஷிகா ஆனந்த் தற்போது விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் எழுந்து நடக்க இன்னும் பல மாதங்கள் ஆகும். யாஷிகா மற்றும் நிரூப் நந்தகுமார் இருவரும் லைவ் வீடியோவில் லிப் லாக் செய்த வீடியோ இணையத்தில் படுவைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.- source: samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!