மகளின் திருமண முறிவு எதிர்பார்க்காத ஒன்று… சமந்தாவின் தந்தை உருக்கம்!

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவகாரத்து செய்யும் நடிகை சமந்தாவின் முடிவுக்கு அவரது தந்தை உருக்கமாக பதில் அளித்துள்ளார்.


தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தாங்கள் பிரிகிறோம் என்று அறிவித்தார்கள்.

நாகசைதன்யாவின் திருமண முறிவு குறித்து அவரது தந்தை நாகார்ஜுனா கூறும்போது, இது துரதிஷ்டவசமான ஒன்று, அதேசமயம் இது அவர்கள் தனிப்பட்ட விஷயம்.. அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு, தனது மகளின் திருமணம் முறிவு எதிர்பார்க்காத ஒன்று. விவாகரத்து குறித்து கேள்விப்பட்டதும் என் மனம் கொஞ்ச நேரத்திற்கு செயலற்றுப் போய்விட்டது. எல்லாம் சில நாட்களில் சரியாகி ஆகிவிடும் என்று முதலில் நினைத்தேன். ஆனால் சரியாகவில்லை என்று வருத்தத்துடன் அவர் கூறியுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!