காதலனுடன் மணப்பெண் ஓட்டம்… மணமகன் செய்த அதிர்ச்சி செயல்..!


மணவறையில் காதலுடன் மணப்பெண் ஓடியதால், மணமகனும் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூருவை அடுத்த மாலூர் பகுதியிலுள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் குரேஷ்(23) என்பவருக்கும், ரம்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு திருமணம் நடக்கவிருந்தது.

இதையொட்டி மணமகன் வீட்டார் மாலை 5 மணியளவில் மண்டபத்துக்கு வந்தடைந்தார். இரவு 7 மணி ஆகியும் பெண் வீட்டார் வராததால், அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுயற்சித்தார்கள். தொலைபேசி அணைக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த மணமகன் வீட்டார், மணமகளின் வீட்டுக்குச் சென்றனர்.

அப்போது, மணமகள் தன் காதலனுடன் முன் தினம் இரவு ஓடியது தெரியவந்தது. இதனால், ரம்யாவின் சகோதரி ரத்னமாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை குரேஷூக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இதையொட்டி, ஞாயிறு காலை 8.15 முதல் 9 மணி வரை முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், மணமகன் குரேஷ், ஞாயிறு காலை 8 மணியளவில் மண்டபத்தில் காணவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!