18 வயது மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து வேட்டையாடிய நபர்!

அறிமுகமான நபரை பார்க்க சென்ற இடத்தில் மது குடிக்க வைத்து 18 வயது மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்த சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

தெலுங்கானாவில் நிஜாமாபாத்தில் 18 வயது மாணவி ஒருவர் தனக்கு அறிமுகமான நபரை பார்க்க சென்றுள்ளார். அப்போது இருவரும் மது அருந்த முடிவு செய்தனர். மது அருந்தியதில் மாணவி போதையால் நிலைகுலைந்துள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அவனுடைய மூன்று நண்பர்களை அழைத்துள்ளான். நான்கு பேரும் அந்த மாணவியை கட்டுமான வேலை நடைபெற்று வந்த கட்டிடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சென்றபின், மேலும் இருவரை அழைத்துள்ளனர்.

ஆறு பேரும் அந்த மாணவியை கற்பழித்துள்ளனர். அந்த மாணவிக்கு சற்று போதை மயக்கம் தெளிய, நள்ளிரவு 1.50 மணியளவில் 100-க்கு போன் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!