வீட்டில் தனியாக இருந்த சிறுமியை நாசமாக்கிய முதியவர்….காவல் காத்த சிறுவன்!

தர்மபுரியில் 7 வயது சிறுமியை கொடூரமாக 74 வயது முதியவரும், 13 வயது சிறுவனும் கடந்த மூன்று மாதங்களாக கற்பழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தர்மபுரி நரசிங்கர் குளம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு மனைவியும், 7 வயது மகளும் உள்ளனர். இவரது மனைவி வீட்டு வேலைக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் இவர்களது 7 வயது மகள் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். சிறுமியின் தந்தை காலை நேரத்தில் வேலைக்காக வெளியே சென்று விடுவார்.

இதேபோல் தாயும் வீட்டு வேலைக்காக வெளியில் சென்று விடுவார். இதனால் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்து வந்தாள். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த பச்சியப்பன் (வயது 74) என்ற கூலித்தொழிலாளி சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் வேலைக்காக வெளியூர் சென்றுள்ள சமயத்தில் சிறுமியிடம் பச்சியப்பன் நைசாக பேச்சு கொடுத்து வந்துள்ளார். பிறகு நாளடைவில் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. சிறுமியிடம் கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது முதியவர் பச்சியப்பன் அத்துமீறி நடந்து கற்பழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனிடம் பச்சியப்பன், நைசாக பேசி வீட்டுக்கு முன்பு காவலுக்கு வைத்துள்ளார்.

இதற்காக அந்த சிறுவனுக்கு ரூ. 10ம், தின்பண்டங்களும் வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அல்லது யாராவது அக்கம்பக்கத்தினர் வந்தால் சத்தம் கொடுக்கும்படி முதியவர் சிறுவனிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி அந்த சிறுவனும் வீட்டிற்கு வெளியே காவல் காத்து நின்று உள்ளான். இதை பயன்படுத்தி முதியவர் வீட்டுக்குள் சென்று தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன், முதியவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து வருவதை பற்றி அறிந்தான். இதனால் அந்த சிறுவனும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் நைசாக பேச்சு கொடுத்து செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தான் என சொல்லப்படுகிறது. முதியவரும், சிறுவனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த மூன்று மாதங்களாக இந்த கொடூர சம்பவம் நடந்து வந்துள்ளது. இதற்கிடையே சிறுமியின் உடல்நிலை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென பாதிக்கப்பட்டது. இதனால் சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு சிறுநீர் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடித்தனர்.

இதுபற்றி சிறுமியின் பெற்றோருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் பற்றி தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் சிறுமி தன்னை மூன்று மாதங்களாக 74 வயது முதியவரும் 13 வயது சிறுவனும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அழுது கொண்டே கூறினாள்.

இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 74 வயது முதியவர் மற்றும் 13 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் முதியவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 10 வயது சிறுவன், சிறுமியை கற்பழித்த 13 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். 7 வயது சிறுமியை முதியவரும் சிறுவனும் கற்பழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டால் தர்மபுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!