2 ஆண்டு சிறையில் இருந்த வாலிபர் – அண்ணன் மீது பொய் பாலியல் புகாரளித்த தங்கை!

மும்பையில், காதலனுடன் சுற்றியதை கண்டித்த அண்ணன் மீது, 2019ல் சிறுமி பாலியல் புகார் அளித்தார். இதில் கைதாகி, இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த வாலிபர் மீதான புகார், பொய் என தெரிய வந்ததால் தற்போது விடுவிக்கப்பட்டு உள்ளார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.இங்கு மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி, தன் 24 வயது சகோதரன், தன்னை இரு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2019ல் போலீசில் புகார் அளித்தார்.

பலாத்காரம் குறித்து தன் பெற்றோரிடம் கூறியும், அவர்கள் சகோதரன் மீது புகார் அளிக்காமல் கண்டிக்க மட்டுமே செய்ததால், தானே, போலீசிடம் வந்ததாக சிறுமி கூறினார்.வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். ‘போக்சோ’ வழக்கு என்பதால், அவரது ‘ஜாமின்’ மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான சிறுமி, தன் சகோதரன் மீது பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார். அதில், தான் காதலனுடன் வெளியே சுற்றுவதை கண்டித்த அண்ணன், காதலர் என்னை ஏமாற்றி விடுவார் என கூறி தாக்கியதால், அவருக்கு எதிராக பொய் புகார் அளித்ததாக கூறினார்.குற்றம் சாட்டப்பட்டவருக்கு புகார்தாரர் தங்கை என்பதால், அண்ணனை காப்பாற்றுவற்காக நடந்தவற்றை மாற்றிக் கூறுவதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.இந்த வழக்கில், பாலியல் பலாத்காரத்திற்கு, சிறுமி தவிர வேறு சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் ஏதுமில்லை. எனவே, வழக்கை தொடர்வது தேவையற்றது என கூறிய நீதிமன்றம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த வாலிபரை விடுவித்தது.- source: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!