கல்லூரியில் படிக்கும் சக மாணவிக்கு மிரட்டல் விடுத்த மாணவன்… பின்னர் நடந்தது என்ன?


சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு மிரட்டல் விடுத்த மாணவன் கைது செய்யப்பட்டார். புதுவை லாஸ்பேட்டை பாரதி நகரை சேர்ந்தவர் ஜெயகுமார். இவரது மகன் பிரேம்குமார் (வயது 20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.


இவரது கல்லூரியில் சின்னக்கடை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும் படித்து வந்தார். அந்த மாணவியை பிரேம்குமார் காதலிக்க சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியுடன் பிரேம்குமார் தகராறில் ஈடுபட்டாராம்.

மேலும் சமூக வலைதளம் மூலம் மாணவிக்கு மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து மாணவியின் தாய் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தார். – Source: dailythanthi.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!