காணாமல் போன சிறுமி… அடிக்கடி பாழடைந்த வீட்டிற்கு போன மாணவனால் அதிர்ச்சி!

சிறுமியை கடத்திச்சென்று பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மாணவர் போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, 9-ம் வகுப்புவரை படித்துவிட்டு படிப்பை பாதியில் நிறுத்தி வீட்டில் இருந்தார். வெள்ளலூரை சேர்ந்த வெள்ளிமலை (19) என்பவர் ஐ.டி.ஐ. தொழில் கல்வி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கும், சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. செல்போனிலும் அடிக்கடி இருவரும் பேசிக்கொண்டனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி மாயமானார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சிறுமியை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து பல இடங்களிலும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாணவர் வெள்ளிமலை, அந்த பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். போலீசார் நோட்டமிட்டு அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று அங்கு அடைத்து வைத்து வெள்ளிமலை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்து சிறுமி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மாணவர் மீது கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவ்லத் நிஷா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இளைஞர்கள், வாலிபர்கள் இந்த சட்டத்தில் சிக்கி தங்களது வாழ்வை சீர்குலைத்துக்கொள்ள வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!