போலீசாருக்கு வீடியோ அனுப்பிவிட்டு அசந்து தூங்கிய டிக்டாக் சூர்யாதேவி!

போலீசார், சூர்யா தேவிக்கு அறிவுரை கூறி அவரது தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காந்தி நகரை சேர்ந்தவர் சூர்யா தேவி. சமூகவலைத்தளமான டிக்டாக்'கில் பிரபலமான இவர் சமீபத்தில் மதுரையில் மற்றொருடிக்டாக்’ பிரபலமான சிக்கா என்ற சிக்கந்தர் என்பவரை சாலையில் வைத்து செருப்பால் அடித்த வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் நேற்றுமுன்தினம் சூர்யா தேவி மதுரை போலீஸ் கமிஷனருக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறி ஒரு வீடியோ அனுப்பி இருந்தார். இதுபற்றி மதுரை போலீஸ் கமிஷனர், திருச்சி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மணப்பாறை போலீசார் நேற்று முன்தினம் இரவு சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் வீட்டின் உள்பகுதி பூட்டப்பட்டிருந்தது.

இதனால், சூர்யாதேவி தற்கொலை செய்து இருப்பாரோ? என்று சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, அறையில் சூர்யா தேவி அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் அவரை எழுப்பி விசாரித்தனர். தான் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி மின்விசிறியில் வேட்டியை தூக்கு கயிறு போல கட்டி வைத்து இருந்துள்ளார்.

இதனையடுத்து போலீசார், சூர்யா தேவிக்கு அறிவுரை கூறி அவரது தாத்தாவிடம் ஒப்படைத்துவிட்டு நள்ளிரவில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!