சமந்தாவுக்கு ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு கிடைத்தன. இதேபோல் சிறந்த நடிகைக்கான விருது சமந்தாவுக்கு கிடைத்தது. ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு இவ்விருது கிடைத்தது.

இந்நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகை சமந்தா சிறந்த நடிகைக்கான விருது வென்றதை ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். தற்போது படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள சமந்தாவுக்கு நடிகை நயன்தாரா, நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!