துள்ளுவதோ இளமை அபிநய் – தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

ஒரே நேரத்தில் 18 படங்களை இழந்து, பட வாய்ப்பு இல்லாமல் அடுத்த வேலை சாப்பட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வரும் நடிகர் அபிநவ் குறித்த செய்தி..

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ், ஷெரின், அபிநய் என புதுமுக நடிகர்களுடன் வெளியான “துள்ளுவதோ இளமை” படம் மாபெரும் வெற்றி பெற்றது. தனுஷுக்கு இணையான கதாபாத்திரத்தில் அபிநய் நடித்திருந்தார். அவரின் நடிப்பை பார்த்த அனைவரும் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என நினைத்திருந்தனர். ஆனால், அவரின் வாழ்க்கை தயாரிப்பாளர்களின் தூரோகத்தால் பாதை மாறியுள்ளது. தற்போது சாப்பாட்டிற்கு கூட கஷட படும் நிலையில், அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருகிறார்.

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ள அபிநய் பல வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்களையும் இழப்புகளையும் பற்றி அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அபிநய் அளித்த பேட்டியில், “ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 18 படங்கள் கையை விட்டுச் சென்றது. பல தயாரிப்பாளர்கள் ஏமாற்றியுள்ளனர். குறிப்பாக எனது இரண்டாம் படத்திற்கான சம்பளம் இன்னும் 60 ஆயிரம் பாக்கி உள்ளது. அம்மாவிற்கு புற்றுநோய் ஏற்பட்டு சேர்த்து வைத்த பணம் சிகிச்சைக்காக செலவாகி அம்மாவும் தற்போது அவருடன் உயிரோடு இல்லை. அப்பா தான் எல்லாமும்மாக துணையாக இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.- source: 1news * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!