கெட்டிக்கார சிறுவர்கள் செய்த வேலையைப் பாருங்க..!

அரசாங்கத்தை எதிர்பார்க்காமல் சிறுவர்கள் செய்த செயல் சமூகத்தின் மீது ஒவ்வொருவரும் அக்கறையுடன் இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தில் பக்மாரா என்ற கிராமம் உள்ளது. நீண்ட நாட்களாக அங்குள்ள சாலை சீரமைக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்- சிறுமியர்களே ஒன்றிணைந்து சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

தவறுகளையும் அலட்சியங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்துபோகும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே, இந்த சிறுவர்களின் பொறுப்புள்ள செயல் சமூகத்தின் மீது ஒவ்வொருவரும் அக்கறையுடன் இருக்கவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

சிறுவர்கள் சாலையை சரி செய்யும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. சாலைப் பணியை அதிகாரிகள் நிறைவு செய்யாமல் பாதியில் விட்டது உண்மையாக இருந்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அதிகாரி உறுதியளித்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!