வீட்டிலேயே சருமம் பளபளக்க என்ன செய்ய வேண்டும்..? இதோ சில ஆயுர்வேத டிப்ஸ்..!


சருமத்தில் நீர்த்தன்மை குறைவாக இருந்தாலே முகத்தில் எண்ணெய் வழிவது, சருமம் வறட்சியுடன் இருப்பது போன்ற பல பிரச்னைகள் உண்டு. அதிலும் குறிப்பாக, பனிக்காலத்தில் இந்த பிரச்னை மிகவே அதிகம்.

அப்படி சருமம் பொலிவில்லாமல் வறட்சியாக இருக்க என்ன காரணம்?… அவற்றை வீட்டிலேயே இயற்கையான வழியில் எப்படி சரிசெய்வது?…

இதனால் அவர்களுக்காக சில ஆயுர்வேத டிப்ஸ்…


தயிர் மற்றும் மஞ்சள் பேஸ் மாஸ்க்

தயிர் – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்பட்டு, ப்ளீச்சிங் செய்த தோற்றத்தைக் கொடுக்கும்.


பப்பாளி

பப்பாளியை அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் பப்பாளி சருமத்துளைகளை ஆழமாக சுத்தம் செய்வதோடு, எண்ணெய் சுரப்பையும் சரிசெய்ய உதவும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். அதற்கு ஆரஞ்சு பழத்தை பாதியாக வெட்டி, சாறு எடுத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!