நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விசாரணை… சிக்கியது மடிக்கணனி!

ராஜ் குந்த்ராவின் வியான் இன்டஸ்ட்டிரிஸ் நிறுவன இயக்குனராக நடிகை ஷில்பா ஷெட்டி செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மும்பையில் பெண்களை ஆபாச படம் எடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா (45), மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், ஆபாச பட வழக்கில் தொடர்பு குறித்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் புறநகர் ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பெற்றனர். மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.

இதற்கிடையே, நேற்று ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!