ஸ்ரீதேவியின் பின்பக்கத்தில் தட்டி நடிப்பை சொல்லிக் கொடுத்ததே என்டிஆர்தான்.. பாலகிருஷ்ணா!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பின்பக்கத்தில் அடித்து எனது தந்தை என்.டி. ராமாராவ் அவருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார் என அருவருக்கத்தக்க வகையில் தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியுள்ளார்.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் ஆதித்யா 369 என்ற படம் 1991 ஆம் ஆண்டு வெளியாகி தற்போது 30 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதையொட்டி அவர் பல்வேறு தெலுங்கு டிவி சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் பேசுகையில் ஆதித்யா 369 திரைப்படத்தை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ் என்னை எந்த மாதிரி நடிக்கச் சொன்னாரோ அதே போல் நான் செய்துவிட்டேன்.யாரையாவது

நமது செயல்பாட்டில் புதுமையைக் கொண்டு வர வேண்டுமானால் யாரையாவது நாம் பின்பற்ற வேண்டும். என்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்வேன், 10 பெண்கள் ஆடும் நடனத்தை பாருங்கள். அதில் யார் நன்றாக ஆடுகிறார்களோ அவரது ஸ்டைலை காப்பியடியுங்கள் என்பேன்.

என் டி ராமாராவ்

மாதுரி தீட்சித் போன்ற பெரிய நடிகைகள் கூட நடனக் கலைஞர் சரோஜ் கானை காப்பி அடித்து அப்படியே ஆடுவார்கள். எனது தந்தை என்.டி.ராமாராவ்தான் நடிகை ஸ்ரீதேவிக்கு நடனம் சொல்லிக் கொடுத்தார். அதுவும் ஸ்ரீதேவி உள்ளிட்ட பெரிய நடிகைகளின் பின்பக்கத்தில் அடித்து அடித்து நடிப்பை சொல்லிக் கொடுத்தார்.

முகபாவனைகள்

அப்போதுதான் ஸ்ரீதேவியின் கால்களில் மிதிப்பார். ஸ்ரீதேவி போன்றோர் நடனம் ஆடும் போது மிகவும் நளினமாக இருக்கும். எனது தந்தையோ மிகவும் கரடுமுரடாக ஆடுவார். இதனால் அவர்களை அடித்து குத்தி அவர் ஸ்டைலில் அவர்கள் நடனம் ஆட வைத்தவர் என் அப்பா. இதன் மூலம் அவர்கள் புதிய புதிய முகபாவனைகளை வெளிப்படுத்தினர்.

கொந்தளிப்பு

இப்படித்தான் என் அப்பா இவர்களுக்கெல்லாம் நடிப்பை சொல்லிக் கொடுத்தார் என பாலகிருஷ்ணா பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை, ஸ்ரீதேவி முதல் மாதுரி தீட்சித் வரை இவர் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.-source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!