14 வயதான சிறுமியை தடுத்து வைத்து பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்திய இளைஞர்கள் மூவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் 5 முதல் 8 வருடகாலம் வரையான சிறைத்தண்டனை விதித்துள்ளது. இங்கிலாந்தின் மத்திய பிராந்திய நகரான கோவென்ரியைச் சேர்ந்த ஜெக் கெய்ன்ஸ் (21) பிரெண்டன் ஷார்ப்ளஸ் (20), ஜெக் மெக்கினலி (21) ஆகியோருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உறவினர் வீடொன்றிலிருந்து காணாமல் போன 14 வயதான சிறுமியை இவர்கள் மூவரும் தடுத்து வைத்து, படம்பிடித்து, ஆபாச இணையத்தளம் ஒன்றில் அச்சிறுமி 18 வயதானவர் எனத் தெரிவித்து விளம்பரமொன்றை வெளியிட்டிருந்தனர்.
அதன்பின் அச்சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினர். 3 தினங்களில் சுமார் 20 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு அச்சிறுமி நிர்ப்பந்திக்கப்பட்டதாக வெஸ்ட் மிட்லண்ட்ஸ் பொலிஸார் நம்புகின்றனர்.
மேற்படி சிறுமி காணாமல் போய், 5 தினங்களின் பின்னர் வீடொன்றை முற்றுகையிட்டு அச்சிறுமியை மீட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் குற்றவாளிகள் என கடந்த நவம்பர் மாதம் நீதிமன்றம் அறிவித்தது, இவர்களுக்கான தண்டனை அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஜெக் கெய்ன்ஸுக்கு 8 வருட சிறைத்தண்டனையும் பிரெண்டன் ஷார்ப்ளஸ், ஜெக் மெக்கினலி ஆகியோருக்கு தலா 5 வருட சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.-Source: metronews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!