தென் கொரியா மருத்துவமனையில் தீடீர் தீ விபத்து… 15 பேர் பலி…!


தென்கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் பலியாகினர். 11 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது. 40 பேர் காயமடைந்துள்ளனர். தென் கொரியா நாட்டில் சியோல் நகரில் மிர்யாங் என்ற பகுதியில் செஜாங் மருத்துவமனை அமைந்துள்ளது.

இந்த நிலையில் இங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரகால சிகிச்சை பிரிவு அறை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது என்று மருத்துவமனையின் 2 செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

தீ விபத்து ஏற்பட்டபொழுது மருத்துவமனையில் 200 பேர் இருந்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 பேர் பலியாகி உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 11 பேரது நிலைமை மோசமடைந்து உள்ளது. 40 பேர் காயமடைந்து உள்ளனர்.

தீ விபத்தினை அடுத்து அனைத்து நோயாளிகளும் மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம் ஒன்றில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பலர் வழியிலேயே இறந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். – Source: dailythanthi.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!