சிகரெட், போதை பழக்கத்தால் சதாவின் கெரியர் நாசமாச்சு.. சீனியர் நடிகர் பகீர்

ரவியின் ஜெயம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சதா. அடடா, பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று அழகாக, சிம்பிளா இருக்கிறாரே என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தும் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை.

தற்போது சதாவின் கெரியர் அடிவாங்கிவிட்டது. இந்நிலையில் சதாவின் கெரியர் நாசமானது எப்படி என்று நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

சதா போதைப் பழக்கம் உள்ளவர். அவர் புகைப்பிடித்துக் கொண்டே இருப்பார். அவர் புகைப்பிடித்ததை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு சிகரெட்டும், போதைப் பழக்கும் உண்டு.

சிகரெட் பழக்கம் இருந்தால் நடிகர்கள் நெருங்கி நடிக்க தயங்குவார்கள். அவர் எப்பொழுது பார்த்தாலும் சிகரெட் பிடித்ததால் தான் அவருடன் சேர்ந்து நடிக்க நடிகர்கள் தயங்கினார்கள். அவர் விலைமாதுவாக நடித்தார். யாராவது ஒரு நடிகை விலைமாதுவாக நடித்தால் அவரின் மார்க்கெட் போய்விடும். குடும்ப பெண்கள் அந்த படங்களை பார்க்க வர மாட்டார்கள். இதனால் சதாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாததாலும், சிகரெட் பழக்கத்தாலும் மார்க்கெட்டை இழந்தார் சதா என்றார்.

முன்னதாக ரஜினி பட வாய்ப்பை இழந்தது குறித்து சதா கூறியதாவது,

சந்திரமுகி படத்தில் நடிக்க இரண்டு முறை வாய்ப்பு வந்தது. ஆனால் சில சூழல்கள் காரணமாக சந்திரமுகி பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை. அதை நினைத்து நான் சில நேரம் அழக் கூட செய்திருக்கிறேன் என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!