‘பிக்பாஸில் கடந்த 4 சீசன்களில் இருந்தது இந்த சீசனில் இல்லையாம்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், 5-வது சீசனில் சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.

கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியும் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பிக்பாஸ் 5-வது சீசனில் சில அதிரடி மாற்றங்களை செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளார்களாம். கடந்த 4 சீசன்களிலும் ஒரே மாதிரியான டாஸ்க்குகள் இடம்பெற்ற நிலையில், இனிவரும் 5-வது சீசனில் புதுவிதமான டாஸ்க்குகளை கொடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

கடந்த சீசனில் தொலைக்காட்சி பிரபலங்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்தனர். எனவே 5-வது சீசனில் அதிகளவில் சினிமா பிரபலங்களை களமிறக்க உள்ளார்களாம். மற்ற சீசன்களை விட இந்த சீசனுக்கான பட்ஜெட்டும் அதிகம் என கூறப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!