6 மாதம் முடிந்த பிறகு குழந்தைக்கு என்ன உணவு சாப்பிட கொடுக்கலாம்..?

எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது.


ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது முடியும் வரையில் உள்ள கால கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி வேகம் சற்றே குறைகிறது, அதேநேரத்தில் குழந்தையின் சத்துணவின் தேவை அதிகரிக்கிறது. இப்பொழுது தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் போதாது.எனவேதான் இணை உணவுத் தேவைப்படுகிறது.இந்த பருவத்தில் நம் வீட்டில் நமது பாரம்பரியத்தில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கும் வீட்டு உணவு வகைகள் ஒவ்வொன்றாக கொடுத்து பழக்க வேண்டும்.

நமக்கு பழக்கமான இட்லி, பொங்கல், இடியாப்பம், சாதம், போன்றவைகளை மசித்து கொடுப்பதற்கு பயப்படத் தேவையில்லை. பருப்பு, காய்கறி வேகவைத்த நீர், பழரசம், அரிசிக் கஞ்சி, சத்து மாவுக்கஞ்சி போன்றவை கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு புது உணவு தான் தரவேண்டும், அந்த உணவை குழந்தை பழகுவதற்கு குறைந்தது ஐந்திலிருந்து ஏழு நாட்கள் அவகாசம் தந்த பின்னரே மற்றொரு புது உணவை தர வேண்டும். உதாரணமாக ஒரு நாள் காலை உணவாக இட்லி கொடுக்க ஆரம்பித்திருந்தால் அடுத்த சில நாட்களுக்கு இட்லி மட்டுமே காலை உணவாக தரவேண்டும். மற்ற வேளைகளில் தாய்ப்பால் தொடரலாம். இந்த உணவுக்கு குழந்தை பழகிய பின்னர் மற்ற உணவுகளை ஒவ்வொன்றாகத் தொடரலாம்.

எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும். அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கரண்டியிலோ/மத்தினாலோ/கையாலோ நன்கு பிசைந்து ஊட்டுவதே மிகவும் சரியானது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!