பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு புதிய நிபந்தனை!

நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு புதிய நிபந்தனை விதிக்கப் பட்டிருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை பிக்பாஸ் குழுவினர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே போட்டியாளர்களாக கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!