தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் மரணம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த ஒளிப்பதிவாளர் சிவன், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.

தமிழில் ரோஜா, தளபதி, இருவர், உயிரே, துப்பாக்கி, செக்கச் சிவந்த வானம், தர்பார் உள்பட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர் சந்தோஷ் சிவன். இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ள இவர், 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

சந்தோஷ் சிவனின் தந்தை சிவனும் மாலையாள திரையுலகில் கொண்டாடப்படும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். இவர் சிறந்த ஒளிப்பதிவுக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த சிவன், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். இவருக்கு வயது 89.

ஒளிப்பதிவாளர் சிவனின் மறைவு மலையாள திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!