தீபிகாவின் மூக்கிற்கு இத்தனை கோடியா? அதிர்ந்து போன திரையுலகம்…!


தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்மாவத்’. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில், உலகம் முழுவதும் இன்று திரைப்படம் வெளியாகிறது.

திரைப்படத்திற்கு தடை விதிக்க, இருமுறை உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வடமாநிலங்களில் போராட்டங்கள் கலவரங்களாக மாறியுள்ளன. இதனால் இன்று திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கான்பூர் சத்ரிய மகா சபை அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அப்போது பத்மாவத் திரைப்படத்தில் நடித்துள்ள தீபிகாவின் மூக்கை அறுத்து வந்தால் ரூபாய்க்களை கொட்டிக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர்.

இதற்காக கான்பூர் மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக மகா சபையின் தலைவர் கஜேந்திர சிங் ரஜாவத் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. – Source: tamil.samayam

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ptkCWB