குழந்தை போல பார்த்துக்கிட்டாரு!! கொரோனாவால் இறந்ததும் அவரை தேடி திண்டாடும் குரங்குகள்!!

குரங்குகளுக்கு உணவளித்துவந்த நபர் உயிரிழந்தநிலையில் அவரை இறந்து தெரியாமல் குரங்குகள் அவரை தேடிவந்து கூச்சலிடும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள வடவள்ளியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65). இவர் கடந்த 6 ஆண்டுகளாக தனது வீட்டிற்கு பின்னால் இருக்கும் தோட்டத்தில் இருந்து வரும் குரங்குகளுக்கு தினமும் உணவு, பழம், நீர் போன்றவற்றை கொடுத்து வந்துள்ளார். இதனால் நாளடைவில் குரங்குகள் ராமலிங்கத்துடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளன.

குழந்தைபோல் அவர் தோளிலும், மடியிலும் ஏறி குரங்குகள் விளையாடவும் செய்துள்ளன. இப்படி தினமும் குரங்குகளை கவனித்துவந்த ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
ராமலிங்கம் உயிரிழந்தது தெரியாமல் இன்று காலை அவரை தேடி வந்த குரங்குகள் கூட்டம் அவர் இன்னும் வரவில்லை என மரங்களின் மீது ஏறி கூச்சலிட்டு வருகின்றது. சக மனிதர்களிடமே அன்பு காட்டாத பலர் இருக்கையில், குரங்குகள் மீது அன்பு காட்டி, அவற்றை கவனித்துவந்த ராமலிங்கம் உயிரிழந்தது அந்த குரங்குகளுக்கு மட்டுமில்லாமல், இந்த மனித குலத்திற்கே ஒரு பெரிய இழப்புதான்.- source: spark * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!