கோவிலுக்கு சாமி கும்பிட வந்த ஓட்டல் அதிபர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் மனைவி…!


திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த ஓட்டல் அதிபர் நோய் கொடுமையால் மனமுடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரை பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்த கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கோவை மாவட்டம் உருமாண்டன் பாளையம் சாஸ்திரி வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது53) என்பது தெரிய வந்தது.

அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்த அவர் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த பாலசுப்பிரமணியன் நோய் கொடுமையால் மனமுடைந்து கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். – Source: maalaimalar.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05