அபாய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்த அருண் பாண்டியன்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் அருண் பாண்டியன், மிகப்பெரிய கட்டத்தை தாண்டி உயிர் பிழைத்து இருக்கிறார்.

கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல நடிகர்கள், நடிகைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது நடிகர் அருண்பாண்டியனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. திருநெல்வேலியில் இருக்கும் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். ஏழு நாள்களுக்கு பிறகு திடீரென அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது.

உடனே மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். கோவிட் பாசிட்டிவ் என்பதாலும் அவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என்பதனாலும் கூடுதல் கவனம் எடுத்து ஆஞ்ஜியோப்ளாஸ்டி சிகிச்சை தந்திருக்கிறார்கள். இப்பொழுது அருண்பாண்டியன் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி இருக்கிறார். நடந்த அத்தனையையும் அந்த மருத்துவமனை தந்த சிகிச்சை பற்றியும் மருத்துவர்களின் நடத்தை பற்றியும் விரிவாக சமூக வலைதளத்தில் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் எழுதியிருக்கிறார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!