தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கூறிய காரணத்தைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில்… நடந்தது என்ன?


சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவ வசந்த் (31). திருமணத்திற்கு பெண் கிடைக்காததால், விரக்தியடைந்த அவர் கடந்த ஞாயிறன்று இரவு ஆ.கே.நகர் – ராயப்பேட்டை சாலை சந்திப்பில் உள்ள பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் வசத்திற்கு தலை, கை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகிலுள்ள ராயப்பேட்டை அரசு பொது மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை முயற்சி காரணமாக அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான், தனக்கு நீண்ட நாட்களாக பெண் கிடைக்காததால், திருமணம் ஆகாத விரக்தியில், தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். -Source: lankasee.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05