இறுதி ஊர்வலத்தில் கண்கலங்கியபடி மலர்தூவிச் சென்ற விஜய் சேதுபதி!

உடல் நலக்குறைவு காரணமாக காலமான இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் விஜய் சேதுபதி கண்கலங்கியபடி மலர்தூவிக் கொண்டே சென்றிருக்கிறார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் எடிட்டிங் பணியின் போது வீட்டுக்கு சென்ற எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார். இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று விஜய் சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, கண்கலங்கிய படி மலர்தூவிக் கொண்டே சென்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!