8 வயது சிறுமிக்கு 70 வயது காமக்கொடூரனால் நடந்த பரிதாபம்..!

சிறுமி காமக்கொடூரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பண்டா மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்தை சேர்ந்த 8 வயது தலித் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கே வந்த ஜக்திஷ் பால் (வயது 70) என்ற முதியவர், திடீரென சிறுமியை தூக்கிச்சென்று வலுக்கட்டாயமாக கற்பழித்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் சிறுமியை கற்பழித்த ஜக்திஷ் பாலை கைது செய்தனர். மேலும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கனவே பார்வை கோளாறு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

8 வயது தலித் சிறுமி 70 வயது காமக்கொடூரனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பண்டா மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!