உல்லாசத்திற்கு தடை… குழந்தையின் உடம்பு முழுவதும் சூடு;நெஞ்சை நொறுக்கும் சித்ரவதை!

தகாத உறவுக்காக தனது மகனை கள்ள காதலன் தீயினால் துன்புறுத்தும் போது அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த தாயின், ஈவு இரக்கமில்லாத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த பெனட் மேரி மற்றும் களக்காடை சேர்ந்த சாலிட்ராஜா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் 9 வயதில் மகளும் 5 வயதில் மகனும் உள்ளனர். சாலிட் ராஜா வனப்பகுதிகளில் உள்ள தோட்டங்களில் 20 நாட்கள் அங்கேயே தங்கியிருந்து நெல்லிக்காய் பறிப்பதற்காக சென்று பின்பு மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே வீட்டிற்கு வருவார் அதே சமயம் பெனட் மெரி வள்ளியூரில் உள்ள தையல் பயிற்சி பள்ளியில் வேலை புரிந்து வந்தார்.
இந்நிலையில் , பெனட் மெரிக்கும் நாங்குநேரி அருகேயுள்ள காத்து நடப்பை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கும் தவறான பழக்கம் ஏற்பட்டு வெள்ளைச்சாமியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்ற போதெல்லாம் தன்னோடு 5 வயது மகனையும் அழைத்துச் சென்றுள்ளார். அந்த சிறுவன் அவர்களின் உல்லாச வாழ்வுக்கு தடையாக இருக்கதாக நினைத்த வெள்ளைச்சாமி ஆத்திரத்தில் சிறுவனின் முகம், வயிறு, உடல் பகுதி, தொடை பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், நகத்தை வைத்து பரண்டியும் கொடூரமாக காயங்களை ஏற்படுத்தியதில் சிறுவனின் முகம், நெஞ்சு பகுதி, தொடை பகுதியில் தழும்புகளும், விரல் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சாலிட் ராஜாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் தெரியவந்ததை அடுத்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்தார். பணகுடி காவல்நிலையத்திற்கு குடும்ப நல அமைப்பினர் தகவல் கொடுத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனிடமிருந்து வாக்குமூலம் போலீசார் வாக்குமூலம் பெற்று சிறுவனை கொடூரமாக தாக்கிய வெள்ளசாமி மீதும், உடந்தையாக இருந்த தாய் பெனட் மேரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்களும், குழந்தை நல அமைப்புகளும், கோரிக்கை வைத்துள்ள நிலையில் தொடர்ந்து இது குறித்து பணகுடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: 1news * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!