கோபித்து கொண்டு தாய் வீடு சென்ற மனைவி… ராணுவ வீரர் விபரீத முடிவு..!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா திம்மையன் பேட்டை ஊராட்சி வன்னியர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). இந்திய ராணுவத்தில் சேர்ந்து ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும் ஜெகத்ரட்சகன், சோம்நாத் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுப்பில் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. இதனால் நதியா 4 நாட்களுக்கு முன்னர் கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த ராணுவவீரர் செந்தில்குமார் குடிபோதையில் நேற்று வீட்டு வரண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராணுவ வீரர் செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!