‘ சாக்கடை தான் இவர்களின் வீடு’. மெய்சிலிர்க்க வைக்கும் காதல் கதை..!!


கொலம்பியாவை சேர்ந்த தம்பதிகள் கடந்த 22 வருடங்களாக சாக்கடையில் வாழ்ந்து வருகின்றனர்.

மரியா கார்சியா, இவரின் கணவர் மிகுவல் ரோபோ வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிகள் போதைப்பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யும் மெண்டலின் தான் முதல் முதலில் சந்தித்துக்கொண்டனர். அப்போது இருவருக்கும் போதை பழக்கம் அதிகமாக இருந்தது. ஆழ்ந்த துயரத்தில் இருவரும் இருந்தனர். அப்போது ஒருவருக்கு ஒருவர் இவர்கள் ஆறுதலாக இருந்து வந்தனர். போதை பழக்கத்தில் இருந்து மீண்ட இவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.

இருவரும் சாக்கடையில் தங்கி வாழ முடிவு செய்தனர். இந்த தம்பதிகள் வாழ்க்கையின் துவக்கத்தில் நிறைய தொல்லைகளை சந்தித்தனர். அதை எல்லாம் தாண்டி தங்களது காதலர் அவர்களை வாழ வைத்தது. இந்த தம்பதிக்கு சாக்கடையை விட்டு வெளியேற விருப்பம் இல்லை. அதனால் தங்களுக்கு கிடைப்பதை நிறைவாக எண்ணி வாழ்க்கை இருவரும் வாழ்ந்து வந்தனர் .

மேலும் இவர்கள் வாழ்ந்து வரும் சாக்கடையில் ஒரு வீட்டிற்கு தேவையான மின் வசதி, சமையல் அறை, விளக்கு என அனைத்து வசதிகளும் உள்ளன. மற்றவர்களை போல கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் கொண்டாடுகின்றனர். இந்த தம்பதியினர் பிளாக்கி என்னும் நாயைக் கூட தங்களின் வீட்டில் வளர்த்து வருகின்றனர்.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!