காலையில் திருமணம்.. மாலையில் இறுதிச்சடங்கு.. கதறி அழும் உறவினர்கள்.!!


சாயல்குடியில் திருமணத்தன்று மதியம் மணமகன் விக்னேஸ்வரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் இளஞ்செம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மலைச்சாமி. தற்போது திருச்சி மாவட்டம் சமயபுரம் கோணலையில் வசிக்கின்றனர். இவர்களின் மகன் விக்னேஸ்வரன் 27.

இவருக்கும் சாயல்குடி அருகே கடுகு சந்தையைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் பிப்., 24ல் கடுகுசந்தை முத்துராமலிங்கபுரம் அம்மன் கோயிலில் காலை 10:30 மணிக்கு திருமணம் நடந்தது.

மணமக்கள் கடுகுசந்தை மணமகள் வீட்டிற்கு வந்தனர். மதியம் 3:00 மணிக்கு மணமகன் விக்னேஸ்வரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி சரிந்தார். சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.விக்னேஸ்வரனின் இறுதி சடங்கு நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்தது. காலையில் திருமணம் முடிந்து மாலையில் மணமகனின் இறப்பு இரு வீட்டார், உறவினர்கள், கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: dinamalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!