அந்த கட்சியிலிருந்து எவன் வந்தாலும் உதைப்பேன்! மன்சூர் அலிகான் ஆவேசம்!


தமிழகத்தில் ஏற்கெனவே இருக்கிற கட்சிகள் போதாதென்று நடிகர் மன்சூர் அலிகான், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ என்ற புதிய கட்சியை இன்று தொடங்கியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது கட்சி துவங்கியுள்ள நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீமான் போட்டியிடுவதற்கு எந்த தொகுதியையும் ஒதுக்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். ஆனாலும், தான் தனிக்கட்சி தொடங்கினாலும் நாம் தமிழருக்கு எதிராகவும், சீமானுக்கு எதிராகவும் தனது கட்சி செயல்படாது என்றும், நாம் தமிழர் கட்சியிலிருந்து தனது கட்சியில் சேர்வதற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உதை தான். அவர்களை உதைத்து விரட்டிவிடுவேன். சீமானுடன் எனக்கு இப்போதும் நல்ல நட்புறவு உள்ளது என்று தெரிவித்தார்.- source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!