மனைவி இறந்துவிட்டதாக நினைத்து கணவர் விபரீத முடிவு..!


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகை கிராமத்தில் ஒசராயப்பா (55)- கரி பீரம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததால் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஒசராயப்பா தனது அக்காவின் மகள் வெங்கடலட்சுமியம்மா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்தனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மா (50)கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுவிட்டு தனது மகனான முருகேசன் (35) என்பவருடன் நாரிபுரம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், முருகேசன் எப்போதும் போல் பணிக்கு சென்று விட, ஒசராயப்பா இரண்டாவது மனைவி வெங்கடலட்சுமியம்மா பார்க்க வந்துள்ளார். அப்போது சமாதானப்படுத்தும் வகையில் பேசி ஒன்றாக வசிக்கலாம் என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் வெங்கடலட்சுமியம்மா கணவனுடன் செல்ல மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒசராயப்பா வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி உள்ளார்.

இரத்த வெள்ளத்தில் வெங்கடலட்சுமியம்மா மயங்கியதால், இறந்து விட்டதாக நினைத்த ஒசராயப்பா மனைவி வீட்டின் பின்புறமாக உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அங்கு திரண்டனர்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வெங்கடலட்சுமியம்மா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒசராயப்பாவின் உடலை கைப்பற்றிய பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.source – newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!