கேரள இளைஞருக்கு துபாய் லாட்டரியில் அடித்த அதிஸ்டம்..!


துபாய் லாட்டரியில் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு முதல் பரிசான ரூ.7 கோடி பரிசு கிடைத்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சரத் குன்னுமல் (வயது 26). இவர் துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இவர் தன் நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து துபாய் லாட்டரி சீட்டு வாங்கினார். இந்த லாட்டரி குலுக்கல் முடிவு வெளியானது. இதில் முதல் பரிசாக 10 லட்சம் டாலர் கிடைத்தது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 கோடி ஆகும்.

லாட்டரி சீட்டில் பரிசு பெற்ற சரத் குன்னுமல் கூறும்போது, நான் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு முதல் பரிசு தொகை கிடைக்கும் என நினைக்கவில்லை. இந்த பரிசை எனது நண்பர்கள் 9 பேருடன் பகிர்ந்து கொள்வேன். மேலும் என் வயதான பெற்றோரின் மருத்துவ செலவுகளுக்காகவும் இந்த தொகையை பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!