2வது திருமணம்…. சொத்திற்காக வீட்டிற்குள் சித்திரவதை செய்யப்படும் குழந்தைகள்..!


இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தந்தையே பெற்ற பிள்ளைகளை வீட்டில் பூட்டி வைத்து சொத்துக்காக சித்திரவதை செய்ததால் உறவினர்கள் அவரை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பலம் அருகேயுள்ள அரசர் குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கட்டிட தொழிலாளியான செல்வராஜ் கடந்த 19 வருடங்களுக்கு முன்பு கீழ்குளத்தை சேர்ந்த சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்டெபி, ஸ்டெபின் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமண வாழ்க்கையின் போதே செல்வராஜிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பிரித்து வாழ்ந்தனர். பின்னர் தான் மனம் திருந்தி விட்டதாக கூறிய செல்வராஜ் சுதாவின் வீட்டில் வந்து வாழ்ந்து வந்தார். அப்போது சுதாவிடம் இருந்த பணம் நகைகளை ஏமாற்றி வாங்கிய செல்வராஜ் தனக்கு ஒரு சொகுசு வாழ்க்கையை அமைத்து கொண்டு தலைமறைவானார்.

சுதா போதிய பணம் இல்லாமல் குழந்தைகளை கவனிக்க முடியாமலும், உடல்நிலை சரியில்லாமலும் சில தினங்களுக்கு முன்பு இறந்துள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வராஜ் இரு குழந்தைகள் மற்றும் மாமியார் ராஜத்தையும் தான் பார்த்து கொள்வதாக கூறி வீட்டிலே வைத்து கவனித்து வந்தார். ஆனால் சில நாட்களிலேயே மாமியார் ராஜத்தை துரத்தி விட்டுள்ளார்.

மனைவி இறந்து 41 நாட்களே ஆன நிலையில் குளச்சல் பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் அஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். மேலும் மூத்த மகளின் நகையை பிடுங்கி கொண்டு குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் வீட்டில் அடைத்து வந்துள்ளார்.

இதில் பயந்து போன குழந்தைகள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து குழந்தைகளை மீட்டனர். ஆனால் செல்வராஜ் மற்றும் அஸ்வதி தலைமறைவான நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி பூட்டிய வீட்டின் முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!