காதலர் தினத்தன்று.. மனைவிக்கு பரிசாக கிட்னி.. நெகிழ வைத்த கணவர்.!!


உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வசிப்பவர் வினோத்பாய் படேல். இவர் தன்னுடைய மனைவி ரீட்டாபென் படேல் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று அவருக்காக தன் கிட்னியை பரிசாக வழங்கியுள்ளார். ரீட்டாபென் படேல் கடந்த 3 வருடங்களாக சிறுநீரக செயலழிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் முதல் ரீட்டாபென்னுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.

செயலிழந்த கிட்னியால் வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட மனைவிக்கு வினோத்பாய் தன் கிட்னியை பரிசாக வழங்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து வினோத்பாய் படேல் கூறுகையில், “என் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் அவர் என்னுடன் இருப்பது அவர் தான். ஆனால் இந்த பிரச்சினையில் மட்டும் என் மனைவியை தனியாக போராட நான் எப்படி அனுமதிக்க முடியும்? எனவே எனது கிட்னியை வழங்க முடிவு செய்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை இன்று செய்துள்ளார். இன்றைய தினம் காதலர் தினம் மட்டுமல்லாமல் அவர்கள் இருவருக்கும் 23ஆம் கல்யாண நாளாகும். இதையடுத்து இந்த தம்பதிக்கு இணையத்தில் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!