வலைதளத்தில் வைரலாகிய புகைப்படம்… அள்ளிகொடுத்த பொதுமக்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்..!


தனக்கு புற்றுநோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களிடம் ஒரு பெண் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனிலுள்ள கெண்ட் என்னும் பகுதியில் நிக்கோல் எல்காப்ஸ் என்ற 42 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் சமூக வளைதளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து மீண்டு வர அதிக பணம் தேவைப்படுவதால் தனக்கு உதவி செய்யுமாறும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த பலரும் நிக்கோல் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என எண்ணி தங்களால் முடிந்த பணத்தை அவருக்கு அனுப்பியுள்ளனர். அதன்படி மொத்தம் 52 ஆயிரம் பவுண்டுகள் (சுமார் 50 லட்சம்) நிதி அவருக்கு வந்து சேர்ந்தது.

இந்நிலையில் நிக்கோல் புற்றுநோயால் பாதிக்கப்படவில்லை எனவும், தனது கிடைத்த நிதியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதோடு, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் அந்த பணத்தை செலவு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படமானது அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போது எடுத்த புகைப்படம் ஆகும். இந்த தகவலானது அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மூலம் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் நிக்கோல் தான் மோசடி செய்து ஈட்டிய பணத்தில் பல லட்சம் ரூபாயை சூதாட்டமாடுவதற்காக செலவிட்டுள்ளார். இந்நிலையில் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நிக்கோல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிக்கோலுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இதுகுறித்து தனது நெருங்கிய தோழியை புற்றுநோய் மூலம் பறிகொடுத்த பெண் ஒருவர் கூறும்போது, நிக்கோலுக்கு புற்றுநோய் என தெரிந்தவுடன் தான் 6,000 பவுண்டுகளை அனுப்பியதாகவும், ஆனால் அவர் பொது மக்களை ஏமாற்றுவதை நினைக்கும் போது அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுபோன்று யாராவது உதவி கேட்டு வந்தால் அவர்களையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது என அந்தப் பெண்மணி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!