தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் முதியவருக்கு நேர்ந்த சோகம்.!


எந்த உடல்நலக் குறைவும் இல்லாத முதியவர் தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் உயிரிழந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 வயது முதியவர் தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே வந்தவுடன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவருக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் எந்த ஒரு உடல் நலக் குறைவும் இல்லை. அதனால் அவருக்கு தடுப்பூசி போடப்பட்டு 15 நிமிடம் அமர வைத்து ஏதாவது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்று ஆய்வு செய்து அனுப்பினர்.

தடுப்பூசி மையத்தில் இருந்து வெளியே வந்த முதியவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். அவருக்கு எந்தத் தடுப்பூசி போடப்பட்டது என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஆகையால் எந்த உடல்நல பாதிப்பும் இல்லாத ஒரு முதியவர் தடுப்பூசி போட்ட 25 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், பொதுமக்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 60 வயதுடைய டிம் ஜூக் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டதை பெருமையாக பதிவிட்டிருந்தார். பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட அவர் இரண்டே நாட்களில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கடந்த வாரம் ட்ரீன் கேயெஸ் என்ற 58 வயது பெண்மணிக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் அவரும் மறுநாளே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!