தெலுங்கானாவில் தனது காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் யரபாலம் கிராமத்தில் வசித்து வந்த புதுமண தம்பதி சேசு ரெட்டி – நவ்யா. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்த நிலையில் நவ்யாயை கணவர் சேசு ரெட்டி கொலை செய்துள்ளார்.
இது குறித்த போலீஸ் விசாரணையில் நவ்யா சமூக வலைதளங்களில் அதிகம் மூழ்கி இருந்ததாகவும் அதனால் சந்தேகப்பட்டு கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனால் சேசு ரெட்டியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக வேறு ஒரு காதல் கதை வெளியாகியுள்ளது. சேசு ரெட்டி ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் நவ்யாவுடன் திருமணத்தில் அவருக்கு விருப்பம் இல்லை. இருப்பினும் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நவ்யாவிற்கு சேசு ரெட்டியின் காதல் தெரியவந்துள்ளது. இதனால் நவ்யா காதலியை கைவிடும் படி கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சேசு ரெட்டி அவரது காதலியுடன் சேர்ந்து தனது புது மனைவியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால் காதலியை அழைத்து விசாரிக்கலாம் என முயற்சிக்கையில் தான் போலீஸ் விசாரணைக்கு பயந்து காதலி சம்பவத்தன்றே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.- source: 1news
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!