வீட்டை விட்டு வெளியவே வராத முதியவர்… அப்புறம் எப்படி கொரோனா வந்துச்சு..?


கொரோனா பரவல் காரணமாக 1 வருடம் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்த முதியவருக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என்று அவரது பேத்தி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள loxwich என்ற பகுதியை சேர்ந்தவர் 91 வயது முதியவர் Peter Short. இவர் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்தே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் தற்போது அவர் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி Peter Short-டை அவரது மகன் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய Peter Short-க்கு ஜனவரி 16 ஆம் தேதி உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Peter Short-டை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக கூறியுள்ளனர். மருத்துவமனையில் எல்லா பொருட்களும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட நிலையில், என் தாத்தா அடிக்கடி கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்யப்படாமல் பயன்படுத்திய ஒரே பொருள் பேனா தான் என்று அவருடைய பேத்தி Emma Loundes கூறியுள்ளார்.

அந்த பேனா மூலமாகத்தான் தனது தாத்தாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்று Emma Loundes கூறுகிறார். பாதுகாப்பாக வீட்டுக்குள் இருந்த Peter-க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை கவலை அடைய செய்துள்ளது.- source: seithisolai

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!